;
Athirady Tamil News

யாத்திரைக்கு பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப மரணம்! பாரிய சாலை விபத்து

0

இந்திய மாநிலம் ஹரியானாவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

யாத்திரை
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 30 பேர் கொண்ட குடும்பத்தினர் வேன் ஒன்றில், ஹரியானாவுக்கு யாத்திரை செல்ல புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற வாகனம் அம்பாலா – டெல்லி – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லொறி ஒன்று வேகமாக மோதியுள்ளது.

இந்த பாரிய விபத்தில் வேனில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விசாரணை
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ள பொலிஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லொறி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.