;
Athirady Tamil News

கொழும்பு வைத்தியசாலையில் திடீர் தீப்பரவல்

0

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (24) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தீ பரவியதை அடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது .

இதனையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவந்த்தாகவும் கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

எனினும் தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.