;
Athirady Tamil News

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது

0

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு இளைஞர்களை கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து சுமார் ஆயிரம் போதை மாத்திரைகளையும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.