;
Athirady Tamil News

சீன ஹேக்கர் குறித்த தகவலுக்கு ரூ.85 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

0

அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கரை பிடிக்க 1 கோடி டாலர் (சுமார் 85 கோடி ரூபாய்) பரிசு அறிவித்துள்ளது.

2020-ல் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து, இந்த ஹேக்கர் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறார்.

அமெரிக்க நிதியமைச்சகம், இந்த சைபர் தாக்குதல் பலரின் உயிரை பறித்திருக்கலாம் என்று கருதுகிறது.l

அத்துடன் இந்த தாக்குதல், முக்கியமாக எரிசக்தி நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்டதால், பெரும் அளவில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

பின்னணியில் சீன நிறுவனம்
செங்டுவை தளமாகக் கொண்ட சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர் குவான் தியான்ஃபெங் ஆகியோர் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இந்த இருவரும், 80,000-க்கும் மேற்பட்ட ஃபயர்வால்களை உடைக்கக் கூடிய ஆபத்தான மென்பொருளை உருவாக்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.