;
Athirady Tamil News

நைஜீரியாவில் 40 விவசாயிகள் கொலை!

0

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் ஒரு வார இறுதியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 40 விவசாயிகள் கொல்லப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடகிழக்கு போர்னோ மாநிலத்தில்இஸ்லாமிய போராளிகள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் தாக்குதலில் குறைந்தது 40 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் போகோ ஹராம் தீவிரவாதிகளாலோ அல்லது இஸ்லாமிய அரசு மேற்கு ஆப்பிரிக்கா மாகாணம் (ISWAP) என்று அழைக்கப்படும் அதன் பிரிந்து சென்ற பிரிவின் உறுப்பினர்களாலோ நடத்தப்பட்டிக்கலாம் என போர்னோவின் ஆளுநர் பாபங்கா உமாரா ஜூலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.