யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் முதலீடுகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பில் விரிவான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் முதலீடுகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், தேசிய நல்லிணக்க நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் விஜித றொகான் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.