;
Athirady Tamil News

உக்ரைனை பாதுகாக்க படைகளை அனுப்ப ஜேர்மனி திட்டம்

0

உக்ரைனை பாதுகாக்க ராணுவ படைகளை அனுப்ப ஜேர்மனி தயாராக உள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டால், இராணுவமற்ற மண்டலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி தனது படைகளை அனுப்பத் தயாராக உள்ளதாக ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிஸ்டோரியஸ், “ஐரோப்பாவில் நாங்கள் NATO-வின் முக்கிய உறுப்பினராக இருக்கிறோம். எனவே, எங்களுக்கு இதில் முக்கியக் கடமையை ஏற்கும் பொறுப்பு உள்ளது,” என்று கூறியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதி மண்டலம் உருவாக்கப்பட்டால், அந்தப் பகுதியை பாதுகாக்க ஜேர்மனியின் பங்களிப்பைத் தகுந்த நேரத்தில் வழங்குவது குறித்து உடனடியாக விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஜேர்மனியின் பாதுகாப்புக்கான செலவை தேசிய உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 3% ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் நடைபெறும் என்றும் பிஸ்டோரியஸ் கூறினார்.

இந்த நடவடிக்கைகள், நேட்டோ அமைப்பில் ஜேர்மனியின் பங்கை வலுப்படுத்துவதோடு, உக்ரைனின் நிலைமைக்கு சர்வதேச ஆதரவைப் பெருக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.