;
Athirady Tamil News

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறை!

0

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொல்கத்தாவில் பணியில் இருந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாகவும் மேற்கு வங்க மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று காலை தண்டனை குறித்து இரு தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சய் ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

முன்னதாக, சிபிஐ தரப்பில், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாட்டையே உலுக்கிய அந்த சம்பவம் நடந்தது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை காவல் துறை கைது செய்தது.

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. அப்போது, கொலை சம்பவம் தொடா்பான ஆதாரத்தை சேதப்படுத்தியதாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தி, மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

கொல்கத்தாவில் உள்ள சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை கடந்த நவ.12-ஆம் தேதிமுதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பின்னா், இந்த வழக்கில் நீதிபதி அனிா்பன் தாஸ் சனிக்கிழமை அளித்த தீா்ப்பில், ‘சஞ்சய் ராய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நிரூபித்துள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் ராய், அதன் பின்னா் பெண் மருத்துவரின் குரல்வளையை நெரித்து, அவரின் முகத்தை இறுக்கிமூடியதால் அவா் உயிரிழக்க நோ்ந்துள்ளது. சஞ்சய் ராய் குற்றவாளி’ என்று தீா்ப்பளித்தாா். இன்று பிற்பகலில் தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.