;
Athirady Tamil News

பிரான்சில் தெரியாமல் ஒருவர் மீது மோதிய நபர்: அடுத்து நிகழ்ந்த பயங்கரம்

0

பிரான்ஸ் ரயில் நிலையம் ஒன்றில், தவறுதலாக ஒருவர் மற்றொருவர் மீது மோதிவிட்டார்.

ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளை திகிலடையச் செய்துவிட்டது.

பிரான்சின் Lyon நகரிலுள்ள Guillotière மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த ஒருவர் மீது மற்றொருவர் மோதிவிட்டார்.

அவர் ஏதோ சொல்லிவிட்டு நடையைக் கட்ட, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த அந்த நபர் ஓடோடிச் சென்று மற்ற நபரின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டார்.

இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பயணிகள் திகிலில் உறைந்தார்கள்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர், கத்தியால் குத்தப்பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சையளித்து, பின் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வெளியாக, இந்த உலகத்துக்கு என்ன ஆயிற்று, மக்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும், பாவம் தாக்கப்பட்ட அந்த நபர், அவருக்கு என்ன ஆயிற்றோ என்னும் ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அவரைக் கத்தியால் குத்திய நபரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.