அமுலுக்கு வருகிறது GOVPAY டிஜிட்டல் புரட்சி!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் உத்தியோகப்பூர்வ நிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களைச் சீரமைத்து நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.