;
Athirady Tamil News

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

0

யாழ்ப்பாணம் தனியார் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனது முகப்புத்தக பதிவில், என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லி தந்திருக்கிறார்.

கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம்
கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்பதை விட ஒரு வைத்தியராக மனதுக்குள் ஒரு ஆழமான கவலையை உண்டாக்கி இருக்கிறது. காயங்களுக்கு மருந்திடும் கைகளால் காயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றேன்.

ஒரு பெண்ணை இழிவு படுத்தி காவாலித்தனம் செய்யும் போது பொறுமையும் ஒரு தடவை செத்து போய்விடுகிறது. ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சிகிற்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.