;
Athirady Tamil News

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

0

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தெற்குப் பகுதியைச் சோ்ந்த அல்-கடாரிஸ், அல்-கேல்வட் ஆகிய கிராமங்களில் ஆா்எஸ்எஃப் படையினரால் கொல்லப்பட்டவா்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவா்.

அந்த கிராமங்களில் இருந்து நைல் நதி வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டும், நீரில் மூழ்கியும் பலா் உயிழந்தனா் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை 1.5 லட்சத்தில் இருந்து 5.2 லட்சம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.