O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை

கா.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதனபடி 2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.
அதெவேளை 2024 க.பொ.த (சா/த) பரீட்சை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.