;
Athirady Tamil News

யாழில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களிடம் மர்ம நபர்கள் அத்துமீறல்

0

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொர்பில் மேலும் தெரியவருவது,

வன்முறைக் குழுக்களின் தோற்றத்தில் இருந்தவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும் நடந்துகொண்டமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு பெற்றோராலும், சமூக நலன்விரும்பிகளாலும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து,

சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பிரதேச செயலகங்களின் உரிய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மாணவ மாணவிகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.