;
Athirady Tamil News

சைவநாதம் மலருக்கான ஆக்கங்கள் கோரல்

0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினரால் 2025 யூன் மாதம் 1 ஆம் திகதி நடத்தப்படவுள்ள சைவப்புலவர் பட்டமளிப்பு மற்றும் சைவ மாநாட்டில் வெளியிடப்படவுள்ள சைவநாதம் – 12 மலருக்கான ஆக்கங்கள் சைவப்புலவர்களிடம் இருந்து கோரப்படுகின்றது என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

அனுப்ப வேண்டிய ஆக்கங்கள் இளஞ்சைவப்புலவர் , சைவப்புலவர் பாடத்திட்டத்திற்கு உட்பட்டதாக இதுவரையில் சைவநாதம் மலரில் வெளிவராத கட்டுரைகளாக அமைதல் வேண்டும்.

கட்டுரைகள் அச்சுப்பதிப்பு 4 பக்கங்களுக்கு மேற்படாதவாறு மென் பிரதியாக [email protected] மின்னஞ்சலுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

பிந்திய கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.