;
Athirady Tamil News

தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி

0

பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, உந்துருளியில் பிரவேசித்த இரண்டு அடையாளந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்ததுடன், காயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.