;
Athirady Tamil News

மட்டகளப்பில் பிடிக்கப்பட்ட 300 Kg எடையுள்ள இராட்சத மீன்

0

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் இன்று (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து வர முடியாமல் நீண்ட நேரமாக மீனவர்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர்.

இவ் யானைத் திருக்கை மீனின் எடை 300 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இது சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.