;
Athirady Tamil News

பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை!

0

இஸ்லாமாபாத்: போர் நிறுத்தம் எதிரொலியாக பாகிஸ்தானில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் சீராகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு – காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அறிவித்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்து கடந்த 24-ஆம் தேதி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்து கொள்ளலாமென இன்று மாலை அதிரடியாக அறிவித்திருக்கிறது பாகிஸ்தான். இதற்கு இந்தியாவும் சம்மதித்துள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியில் இனி விமானங்கள் பறக்க தடையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விரைவில் விமான சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.