மெக்சிகோவில் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சிறிய விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கவுதமாலா எல்லைக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் கால்நடைகளிடையே பரவும் ஒட்டுண்ணிகளை அழிக்க கூடிய குறிப்பிட்ட வகையை சேர்ந்த ஈக்களை விமானத்திலிருந்து பறக்க செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று இந்த விபத்து ஏற்பட்டது. கவுதமாலாவை சேர்ந்த இரு விமானிகளே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்