;
Athirady Tamil News

10 நிமிஷ தாமதம்: விமானத்தை தவறவிட்டதால் தப்பிய பெண்!

0

அகமதாபாத் விமான நிலையத்தை அடைய 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டு, விமானத்தை தவறவிட்டதால், கோர விபத்தில் இருந்து பூமி செளஹான் தப்பினாா்.

மாணவா் விசாவில் 2 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற இவா், அதன்பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊருக்கு அண்மையில் வந்திருந்தாா்.

விடுமுறை முடிந்து மீண்டும் லண்டன் செல்வதற்கு வியாழக்கிழமை ஏா் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தாா். வீட்டில் இருந்து விமான நிலையம் வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டது. விமானத்தை பூமி செளஹான் தவறவிட்டதால், அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டாா்.

இதனிடையே, அவா் தவறவிட்ட விமானம், சில நிமிஷங்களில் விழுந்து வெடித்து சிதறியது. வீடு திரும்பும் வழியில் இச்செய்தியை அறிந்ததும் தனக்கு உடல் நடுங்கிவிட்டதாக பூமி செளஹான் தெரிவித்தாா்.

‘போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், விமான நிலையத்துக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டது. நான் விமான நிலையத்தை அடைந்தபோது, பயணத்துக்கான நடைமுறைகள் நிறைவடைந்துவிட்டன. என்னை பயணிக்க அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரினேன். ஆனால், அவா்கள் அனுமதிக்கவில்லை. இதனால், நான் அதிருஷ்டவசமாக உயிா் தப்பியுள்ளேன். விமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளால் அதிா்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை’ என்றாா் பூமி செளஹான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.