;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 15 வயது சிறுமியுடன் ஒருவர் பலி

0

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி அருகிலுள்ள பனை மரத்தில் மோதி கார் சாரதியான தந்தையும் 15 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நேற்று திங்கட்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் தனது மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

சம்பவதினத்தில் அதிகாலை 3.00 மணியளவில் கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த சிறுமியின் தாயார் மட்டும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் உயிரிழந்தவர்களின் சடலம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.