;
Athirady Tamil News

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – குற்றவாளி மனோஜித் சைக்கோ என குற்றச்சாட்டு

0

பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி மனோஜித் மனநோ​யால் பாதிக்கப்பட்​ட​வர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

பாலியல் வன்​கொடுமை
கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த மாணவி (24) ஒருவர் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த மனோஜித் மிஸ்ரா(31) அந்த மாணவியை காதலித்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்காததால் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மனோஜித் மிஸ்ரா, அவரது நண்பரான முதலாமாண்டு மாணவர் ஜாயிப் அகமது (19), 20 வயது நிரம்பிய பிரமித் முகர்ஜி மற்றும் கல்லூரியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் பாதிக்கப்பட்​ட​வர் என அவரது முன்​னாள் வகுப்பு தோழர்​களும்,

ஜூனியர்கள் குற்றச்சாட்டு
ஜூனியர்​களும் குற்​றம்​சாட்​டி​யுள்ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறுகையில், மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​ததுடன், பாலியல் வன்​முறை​யில் ஈடு​படும் அளவுக்கு மோச​மான நடத்தை உடைய​வர். அதனால்​தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்​லூரி​யின் திரிண​மூல் பிரி​வில் இருந்து மிஸ்ரா வெளி​யேற்​றப்​பட்​டார்.

பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்​களைப் பார்த்​தா​லும் என்னை திரு​மணம் செய்து கொள்​கிறா​யா? என்று பலமுறை தொல்லை கொடுத்​துள்​ளார். பெண்​களின் புகைப்​படங்​களை மார்​பிங் செய்து நண்​பர்​களிடையே பரப்​பும் அளவுக்கு மனநோய் உடைய​வர்.

பெண்​களை உடல்​ரீ​தி​யாக​வும் அவமானப்​படுத்​து​வார். பாலியல் வன்​கொடுமை, தாக்​குதல், மிரட்டி பணம் பறித்​தல் மற்​றும் உடல் ரீதி​யில் துன்​புறுத்​தல் செய்​வ​தாக மிஸ்ரா மீது ஏராளமான புகார்​கள் மாணவி​களின் சார்​பில் தரப்​பட்​டும் அவருக்கு எதி​ராக எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை எனத் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.