;
Athirady Tamil News

நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு

0

நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் அரசடி நகர் வட்டாரத்திற்கு உட்பட்ட பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பிலால், மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் ஹைர், மஸ்ஜிதுல் ஜெமிலா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் மர்ஜான் மற்றும் மஸ்ஜிதுல் அலியார் ஆகிய பள்ளிவாசல்களை அண்மித்த பகுதிகளில் பழுதடைந்திருந்த தெரு மின் விளக்குகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இவ்வேலைத்திட்டம் விரைவாகவும் திறம்படவும் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம்  , சபை உறுப்பினர் ஐ.எல்.எம். ஜாபிர் ,சபையின் உத்தியோகத்தர்களுடன் இணைந்து நேரில் சென்று பணிகளை மேற்பார்வை செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.