யாழில் இளைஞர் ஒருவர் திடீர் உயிரிழப்பு

சுன்னாகத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த 27 வயது இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதில் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றுமுன்தினம்(2) இரவு கதைத்துக் கொண்டிருந்தபோது குறித்த இளைஞனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்தார்.