;
Athirady Tamil News

யாழில் இளைஞர் ஒருவர் திடீர் உயிரிழப்பு

0

சுன்னாகத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த 27 வயது இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதில் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றுமுன்தினம்(2) இரவு கதைத்துக் கொண்டிருந்தபோது குறித்த இளைஞனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.