;
Athirady Tamil News

ATM மோசடி; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட திருடன் கைது

0

போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய நபர், பல ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் மோதர, எலி ஹவுஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் ம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திறந்த பிடியாணை
விசாரணைகளைத் தொடர்ந்து, வெல்ல வீதி, மஹாபாகே, பிலியந்தலை, யக்கல மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் பதிவான ஏடிஎம் அட்டை நிதி மோசடி தொடர்பாக அவர் தேடப்படும் நபர் என்பது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமல்லாது கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 07 வழக்குகள் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 02 வழக்குகள் தொடர்பாக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.