எகிப்து தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தீ விபத்து ; தொலைபேசி சேவை பாதிப்பு
மத்திய கிழக்கில் அமைந்துள்ள டெலிகாம் எகிப்து நிறுவனம் தலைநகர் கெய்ரோவில் 7 அடுக்குமாடி கட்டிடத் தீ விபத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் முக்கிய கருவிகள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தால் எகிப்தில் பெரும்பாலான தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் டெலிகாம் எகிப்து நிறுவனத்தில் பணியாற்றிய 14 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.