தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; துயரில் கதறும் குடும்பம்
புளியம்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய கணிதபாட ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இன்று அதிகாலை 12.15 மணியளவில், மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்