;
Athirady Tamil News

கஞ்சாவுக்கு பச்சைக் கொடி காட்டும் ட்ரம்ப்!

0

கஞ்சாவைக் குறைந்த ஆபத்தான மருந்தாக மறுவகைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ட்ரம்பின் குறித்த அறிவிப்பிற்குப் பின்னர் அமெரிக்கப் பங்குச் சந்தையில் கஞ்சா தொடர்பான வணிகங்களின் பங்கு விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.