;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

0

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் நேற்று (16) பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் அளவுகோலில் 4.9ஆக பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்தப் பகுதியில் சுமார் 11,000 கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.