;
Athirady Tamil News

ரணிலுக்காக ஒன்று கூடிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல அரசியல்வாதிகள் இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் கூடியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹஷிம் மற்றும் பழனி திகாம்பரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, காவிந்த ஜயவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.