;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் தையல் கடைகாரரின் மோசமான செயல் அம்பலம் ; மாறுவேடத்தில் மடக்கிப்பிடித்த அதிகாரிகள்

0

ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு குழுவும் காத்தான்குடி பகுதியில் ஒரு குழுவுமாக ஒரே நேரத்தில் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

போதை வியாபாரம்
இந்த நிலையில் காத்தான்குடி எப்.சி. வீதியில் வியாபாரத்துக்காக போதை பொருளை எடுத்துக் கொண்டு சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

அதேவேளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் வைத்து அந்த பகுதியில் தையல் கடை உரிமையாளரான வியாபாரியை 110 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு வியாபாரிகளையும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.