;
Athirady Tamil News

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0

பாராமதி: மகாராஷ்டி​ரா​வில் விமான விபத்​தில் உயி​ரிழந்த துணை முதல்​வர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரி​யாதை​யுடன் பாராம​தி​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது.

மகா​ராஷ்டிர துணை முதல்​வர் அஜித் பவார் உள்​ளாட்சி தேர்​தல் பிரச்​சாரக் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக நேற்று முன்​தினம் மும்​பை​யில் இருந்து பாராம​திக்கு ‘லியர்​ஜெட் 45’ ரக விமானத்​தில் சென்​றார். அவருடன் பாது​காப்பு அதி​காரி விதிப் ஜாதவ், பைலட்​கள் கேப்​டன் சுமித் கபூர், சாம்​பவிபதக், விமான உதவி​யாளர் பிங்க்கி மாலி ஆகிய 4 பேரும் சென்​றனர்.

அஜித் பவார் சென்ற விமானம் பாராமதி விமான நிலை​யத்​தை நெருங்​கிய​போது, பனி மூட்​டம் காரண​மாக ஓடு பாதை தெரிய​வில்லை. இதனால் விமானம் வானில் வட்​டமடித்து மீண்​டும் தரை​யிறங்க முயன்​றது. அப்​போது, ஓடு​பாதை​யில் இருந்து 200 மீட்​டர் தொலை​வில் விமானம் தரை​யில் மோதி தீப்​பிடித்து எரிந்​தது. இதில், விமானத்​தில் பயணம் செய்த அனை​வரும் உயி​ரிழந்​தனர்.

அஜித் பவாரின் மறைவு தேசிய வாத காங்கிரஸ் தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

தொண்​டர்​கள் முழக்​கம்: இந்நிலையில், இறுதிச் சடங்குகளுக்காக பாராம​தி​யில் உள்ள அஜித் பவாரின் கதேவாடி கிராமத்​தில் இருந்து வித்ய பிர​திஸ்​தான் மைதானத்​துக்கு தேசி​யக்கொடி போர்த்தி​யபடி அவரது உடல் நேற்று காலை வாக​னத்​தில் ஊர்வல​மாக எடுத்து வரப்​பட்​டது.

பாராமதி அஜித் பவாரின் முன்​னாள் தொகுதி என்​ப​தால், தேசி​யவாத காங்​கிரஸ் கட்சி தொண்​டர்கள் ஆயிரக்​கணக்​கா​னோர் அவரது இறுதி ஊர்​வலத்​தில் பங்​கேற்​றனர். ‘அஜித் தாதா அமர் ரஹே’ என அவர்​கள் கோஷம் எழுப்​பியபடி இறு​திச் சடங்​கில் பங்​கேற்​றனர். தகன மேடைக்கு அஜித் பவார் உடல் கொண்டு வரப்​பட்​டதும், தொண்டர்​களின் முழக்​கம் இன்​னும் அதி​கரித்​தது. இதனால் அனை​வரும் அமைதி காத்​து, இறுதி அஞ்​சலி செலுத்​துமாறு ஒலிபெருக்​கி மூலம் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டது.

இறுதிச் சடங்​கு​கள் நடை​பெற்​ற​போது, சரத் பவாரின் மனைவி சுனேத்ரா கண்​ணீர் மல்க நின்று கொண்​டிருந்​தார். அவருக்கு சரத் பவாரின் மகளும், மக்​களவை எம்​.பி.​யு​மான சுப்​ரியா சுலோ ஆறுதல் கூறியபடி இருந்​தார். அஜித் பவாரின் இரு மகன்​கள் பர்த் மற்​றும் ஜெ ஆகியோர் இறுதிச் சடங்​கு​களை செய்து சிதைக்கு தீ மூட்​டினர். அஜித் பவார் உடலுக்​கு, மகா​ராஷ்டிரா போலீ​ஸார் 21 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை செலுத்​தினர்.

தலை​வர்​கள் இறுதி அஞ்சலி: இறு​திச் சடங்​கில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, நிதின் கட்கரி, முரளிதர் மொகோல், பாஜக தலை​வர் நிதின் நவீன், அஜித் பவாரின் சித்​தப்பா சரத் பவார் ஆகியோர் பங்​கேற்​றனர். மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னாவிஸ், துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே, மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர்​கள் சுஷில் குமார் ஷிண்டே, அசோக் சவான், ஆந்​திர பிரதேச அமைச்​சர் நாரா லோகேஷ் உட்பட பலர் இறு​திச் சடங்​கில் பங்​கேற்று மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தினர்.

சிவசேனா (உத்​தவ் அணி) தலைவர் உத்​தவ் தாக்​கரே, நவநிர்​மாண் சேனா தலை​வர் ராஜ் தாக்​கரே ஆகியோர்​ கதே​வாடி கிராமத்​தில்​ உள்​ள அஜித்​ பவாரின்​ இல்​லத்​தில்​ மலர் அஞ்​சலி செலுத்​தினர்​.

You might also like

Leave A Reply

Your email address will not be published.