தருமபுரம் பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்!
வளிமண்டலத் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி, தருமபுரம் பொலிஸார் இன்று( 21.02.2026) கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தருமபுரம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
இது தொடர்பாக, தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.