;
Athirady Tamil News

போர் சூழலுக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்

0

ஈரானில் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து பாரிய வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

ஈரானில் நிலநடுக்கம்
இந்நிலையில், ஈரானின் கெராஷ்(Gerash) பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கனவே ஈரான் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் 40க்கும் அதிகமான முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 500க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பல்வேறு கட்டிடங்கள் வான்வழி தாக்குதலால் முற்றிலும் உருக்குலைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.