;
Athirady Tamil News

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்

0

ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் தானும் நிச்சயமாக ஈடுபட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அடுத்த தலைவராக வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

கமேனியின் மகன்
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு ட்ரம்ப் வழங்கிய பேட்டியில், “அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். கமேனியின் மகன் பலவீனமானவர். அந்த நியமனத்தில் நான் ஈடுபட வேண்டும்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வெனிசுலாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை எடுத்துக்காட்டாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் முன்னாள் தலைவரின் கொள்கைகளை தொடரும் ஒருவரை அமெரிக்கா ஏற்காது என்றும் ஈரானுக்கு அமைதியும் ஒற்றுமையும் கொண்டுவரக்கூடிய ஒருவரை தாங்கள் விரும்புவதாகவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த உச்ச தலைவர்
இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் நோக்கம் ஆட்சியை மாற்றுவது அல்ல என்று வெள்ளை மாளிகை முன்பு அறிவித்திருந்த நிலையில், ட்ரம்பின் இந்த கருத்துகள் புதிய அரசியல் விவாதங்களை உருவாக்கியுள்ளன.

ஈரானின் அடுத்த உச்ச தலைவரை தேர்வு செய்வது குறித்து அந்த நாட்டின் மதத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனால் இதுவரை புதிய தலைவர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.