;
Athirady Tamil News

வீட்டுத் தளபாட உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ; பல கோடி நட்டம்

0

அக்குறணையில் வீட்டுத் தளபாட உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று (08) அதிகாலை வேளை தீப்பற்றி முற்றாக நாசமாகியுள்ளது.

அக்குறணை 7ம் மைல்கள் பிரதேசத்திலுள்ள மேற்படி தளபட நிறுவனமானது உற்பத்தி நிலையம், காட்சியறை, களஞ்சியம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது.

அவை அனைத்தும் முற்றாகச் சேதம் அடைந்த காரணத்தால் பல கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தீ ஏற்படக் காரணம் என்னவென்று இன்னும் கண்டறியப்படவில்லை என அளவத்துகொடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.