;
Athirady Tamil News

எரிபொருள் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் அறிவிப்பு!

0

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ரகு இதனைத் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம்
லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன்.

நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாக நான் கூறவில்லை.

எவ்வாறாயினும், நாட்டுக்குள் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்காக லங்கா ஐஓசி நிறுவனமும் அரசாங்கமும் தங்களால் இயன்ற உச்சகட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.