;
Athirady Tamil News

மனைவி உயிரிழந்து ஒரு மாதத்தில் கணவனும் உயிரிழந்த சோகம்; கிழக்கில் சம்பவம்

0

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து கோளாவில் 2 இல் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன் மனைவி மரணம்
நேற்றையதினம் (18) அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குடும்பத்தார் அவரை தேடிவந்த நிலையில் ஊடகங்கள் வாயிலாக அறிந்த உறவினர்கள் சடலத்தை நேரில் சென்று அடையாளம் காட்டினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியொர் சடலத்தை பார்வையிட்டனர்.

தொடர்ந்து தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக நேற்று (18) ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்தவரின் மனைவி மரணடைமடைந்த நிலையில் அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.