;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

0

கடற்பரப்பில் 1600 கி.மீ. தூரம் வரை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை ஹோர்முஸ் நீரிணை அருகே பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ். ஆன்சன், தற்போது அரபிக் கடலில் உள்ளதாக அல்ஜஸீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, ஈரான் மற்றும் இவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்து, ஈரான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவுக்கு ஆதரவாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த எச்.எம்.எஸ். ஆன்சன் நீர்மூழ்கிக் கப்பல் அப்பகுதியில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த எச்.எம்.எஸ். ஆன்சன் எனப்படும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலானது 1,600 கி.மீ. தூரம் வரை இலக்கு நிர்ணயித்து அழிக்கக் கூடிய திறன் வாய்ந்த டோமாஹாக் பிளாக் 4 என்ற ஏவுகணையைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவு பெற்ற நாடுகளுக்குச் சொந்தமான அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வகையில் லண்டன் தளவாடங்களையும் ராணுவப் படைகளையும் பயன்படுத்திக்கொள்ள பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை அருகே அரபிக் கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.