;
Athirady Tamil News

பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு

0

போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் அதிகரிப்பு உள்ளிட்ட தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ, தங்களது கோரிக்கைகளுக்கு நாளை மறுநாளுக்குள் உரிய பதில் வழங்கப்படாவிட்டால், பெற்றோலியக் கழகம், அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.