;
Athirady Tamil News

ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்!

0

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதிகளில் புதன்கிழமை(ஏப். 8) பகல் எந்தவொரு முன்அறிவிப்புமின்றி இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்தது.

ஈரானுடன் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திவரும் சண்டைக்குத் தற்காலிகத் தீர்வாக, அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லெபனானில் அங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்களைச் சேகரித்து வருவதாக லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பலி எண்னிக்கை 250-ஐ கடந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. 1,150-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா குழு மீதான தாக்குதலும் உள்ளடக்கம் என்றே மத்தியஸ்தம் செய்துவரும் பாகிஸ்தான் தெரிவித்தாலும், இந்த ஒபந்தம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுக்குப் பொருந்தாது என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பெய்ரூட், தெற்கு லெபனான், கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் வெறும் பத்தே நிமிஷங்களில் ஹிஸ்புல்லாக்களின் இருப்பிடங்களில் 100 இலக்குகளைக் குறிவைத்து புதன்கிழமை தாக்கியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.