;
Athirady Tamil News

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுக்குத் தயாா்: ஈரான் தூதா்

0

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையின்போது நியாயமற்ற நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்தது. இதனால் அந்தப் பேச்சுவாா்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது. ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால், மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியமாகும்.

ஈரானின் கடற்பரப்பில் ஹோா்முஸ் நீரிணை உள்ளது. ஈரானால் என்ன செய்ய முடியும், அதன் திறன்கள் என்னவென்பதை அமெரிக்கா நன்கு அறியும் என்று தெரிவித்தாா்

You might also like

Leave A Reply

Your email address will not be published.