;
Athirady Tamil News

தென்னிலங்கையில் பயங்கரம் – மாமாவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்

0

மாத்தறை, வெலிகம, பரணக்கடை பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞர், தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் வீட்டில் வசித்து வந்தார்.

மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு
கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, இந்த கொலை செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.