;
Athirady Tamil News

எவரெஸ்ட் சிகரத்தில் ஒரு வாரமாக மாயமான வழிகாட்டி உயிருடன் மீட்பு

0

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறித் திரும்பும்போது மாயமான வழிகாட்டி தவா ஷொ்பா (52), ஒரு வாரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டாா்.

போலந்து நாட்டு மலையேறும் வீரா் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்ற இவா், கடந்த 29-ஆம் தேதி மலையிலிருந்து கீழே இறங்கும்போது மாயமானாா். அவருடன் சென்றவா் அடிவார முகாமை வந்தடைந்த நிலையில், தவா ஷொ்பா மட்டும் வரவில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நடந்த தீவிர வான்வழித் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அடிவார முகாமுக்கு மேலே உள்ள கும்பு பனிப்பொழிவு பகுதியில் வியாழக்கிழமை தூய்மைக் குழுவினா் அவரைக் கண்டறிந்தனா். தொடா்ந்து, அவா் ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.