;
Athirady Tamil News

வடக்கில் இருந்து பனங்கள்ளு ஏற்றுமதி செய்ய முயற்சி!!!

0

பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை
மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஒரு ஏற்றுமதியினை செயற்படுத்துவதற்கான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்த தயாராக உள்ளோம்

அதன் ஒரு அங்கமாக பனங்கள்ளு உற்பத்தி கிராமம், பனங்கட்டி உற்பத்தி கிராமம்,கடலட்டை உற்பத்தி கிராமம் போன்றவற்றை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் ஏதாவது எமது அமைச்சுக்கு கிடைக்கப்பட்டால் நாங்கள் அதற்கு ஆதரவளிக்கத் தயார்.தற்போது நமது நாட்டிற்கு ஏற்றுமதி கட்டாயம் தேவையானது.

குறிப்பாக நுவரெலியாவில் கோப்பி தேயிலை போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது.எனவே வடக்கில் இருந்து பனங்கள்ளை தயார் செயது ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.