;
Athirady Tamil News

கொழும்பு அரசியலுக்கு இவ்வாரம் முக்கியம் !!!

0

அடுத்து என்ன? நடக்கும் என்றெல்லாம் பலரும் தலையைப் போட்டு பிய்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பு அரசியலில் இவ்வாரம் தீர்மானம் மிக்கதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கடந்த வௌ்ளிக்கிழமை (06) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் என்றும், அதன்பிரகாரம் இராஜினாமா கடிதத்தில் பிரதமர் கையெழுத்திட்டார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதி கேட்டுக்கொண்டதை, அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தவர்கள் உறுதிப்படுத்திய போதிலும், ஜனாதிபதி அவ்வாறு எந்தவிதமான கோரிக்கையையும் விடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவும் கைச்சாத்திடவில்லையென பிரதமர் தரப்பு விளக்கமளித்திருந்தது.

இன்று (09) திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முக்கிய அறிவிப்பொன்றை விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே எதிர்பார்ப்பு, கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இருந்தது. எனினும், பிரதமர் எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.

இதற்கிடை​யே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை சஜித் நிராகரித்துவிட்டார்.

சஜித் ஏற்றுக்கொள்ளாவிடின் தாங்கள் தயாரென, அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் சுயாதீனமாக இயங்கும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்பன்பில தெரிவித்திருந்தனர்.

எனினும்,சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைக்கு இணங்க இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்போமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இதற்கிடையே சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இடையில் ஜனாதிபதி மாளிகையில், நேற்று (08) மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

’பேச்சுவார்த்தை வெற்றி’ !!

’ஜனாதிபதியின் கையிலேயே முடிவு’ !!

’அரசியல் ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ !!

’வீதியில் நடக்க முடியாத நிலை மகிந்தவுக்கு’ !!!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை !!!

மஹிந்தவின் வீட்டின் முன் மலர் வளையம் !!

பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை : நாளை கட்சித்தலைவர்கள் கூட்டம்!!

பாராளுமன்ற வீதி தடைகள் நீக்கம் !!

அவசரகாலச் சட்டம் ஏன்? அரசாங்கம் விளக்கம் !!

அரசாங்கத்தை சஜித்திடம் கொடுக்கிறார் கோட்டா?

சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்!!

“Go Home Ranil” புதிய போராட்டம் ஆரம்பம் !!

அவசரகால சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை !!

அவசரகால சட்டம் தேவையா? கொதித்தெழுந்தார் ஜீவன் !!

’அவசர நிலை நெருக்கடிக்கு தீர்வாகாது’ !!

அவசர நிலை: கனேடிய உயர்ஸ்தானிகர் கருத்து !!

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல் !!

இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!!

“சபாநாயகரை வீட்டுக்காவலில் வைப்போம்” !!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

ஷிரந்தி பிரதமர் விருந்தினர்: சமூக வலைத்தளங்களில் கடும் சாடல் !!

பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் !!

“மஹிந்த சரணம் கச்சாமி” பாடுபவர் சாணக்கியன்: ரணில் சாட்டையடி !!

உள்ளாடைகளை உலரவிட்டு எதிர்ப்பு !!

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.