;
Athirady Tamil News

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக ச.துவாரகன் தேர்வு!!

0

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2022ஆம் ஆண்டுக்கான தலைவராக கொக்குவில் ஸ்டார் இளைஞர் கழகத்தை சேர்ந்த ச.துவாரகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் நேற்று காலை அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

இக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக நல்லூர் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சூரிய பிரகாஷ் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது நல்லூர் பிரதேசத்திலுள்ள 22 இளைஞர் கழகங்களை சேர்ந்த 51 இளம் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அனைவருடைய விருப்பின் அடிப்படையில் தலைவராக ச.துவாரகனும், செயலாளராக இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் யுகராஜ், பொருளாலராக சங்கிலியன் இளைஞர் கழகத்தை சேர்ந்த ஜெவின், உப தலைவராக செல்வி கீர்த்தனா, உப செயலாளராக அக்கினி இளைஞர் கழகத்தை சேர்ந்த செல்வி கௌசிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.