;
Athirady Tamil News

டெல்லி ஆஸ்பத்திரியில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை!!

0

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய மருத்துவ துறை மூத்த டாக்டர் அருப் பாசு தலைமையிலான டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சோனியா காந்தியின்உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் குணமடைந்து வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.