;
Athirady Tamil News

இம்ரான்கான் காலில் மீண்டும் எலும்பு முறிவு: கொலை முயற்சி என்று கோர்ட்டில் முறையீடு!!

0

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் (வயது 70) கடந்த நவம்பர் மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் காலில் காயம் அடைந்தார். அதில் இருந்து மெதுவாக குணமடைந்து வந்த அவர், தன் மீதுள்ள வழக்குகளில் ஜாமீனை நீட்டிப்பதற்காக கோட்டுகளில் நேரில் ஆஜராகி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு அவர் லாகூர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராக சக்கர நாற்காலியில் வந்தார். அப்போது அங்கு நின்ற கூட்டத்தினர் அவரை நெருக்கித் தள்ளியதில் மீண்டும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக அவரது கட்சியினர் நேற்று குற்றம் சாட்டினர்.

பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறி உள்ளனர். டாக்டர்கள் அவரை 10 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் ஒரு முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் “தனக்கு எதிராக 3-வது படுகொலை முயற்சி (கோர்ட்டு சம்பவம்) நடந்துள்ளது. எனவே எனது பொது வெளிப்பாட்டைத் தவிர்ப்பதற்காக தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வழக்குகள் அனைத்தும் அரசியலுக்காக புனையப்பட்டவை” என்று கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.