;
Athirady Tamil News

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்!

0

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை தொடர்கின்றது.

காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஆதரவாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

”பௌத்தம் உன் மதம் வழிபடு தையிட்டி என் மண் வழி விடு”, ”சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை உடனடியாக அகற்று” , ”கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நிறுத்து” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.